Don't Miss!
- Finance பெங்களூரு டிராபிக்: மலைப்போல நம்பப்படும் புதிய சேவை.. இதுமட்டும் நடந்துட்டா, வேற லெவல் தான்..!!
- News "டிட்டோ" கருணாநிதி.. கலைஞரை ஞாபகப்படுத்துகிறார் உதயநிதி.. இது புதிய மைல்கல்.. திமுகவுக்கு மகிழ்ச்சி
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'நேபாளி'க்கு போலீஸ் நோட்டீஸ்!
பரத், மீரா ஜாஸ்மின் ஜோடியாக நடித்து வெளியாகியுள்ள படம் நேபாளி. இப்பத்தில் காவல்துறையை இழிவுபடுத்துவது போல காட்சிகள் உள்ளதாக சர்ச்ைச எழுந்துள்ளது.
இதையடுத்து இயக்குநர் துரைக்கு வட சென்னை காவல் இணை ஆணையர் ரவி, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து இணை ஆணையர் ரவி கூறுகையில், நேபாளி படத்தில் போலீசை அவமதிக்கும் காட்சிகள் நிறைய உள்ளன. விசாரணை நடத்தப்போகும் இன்ஸ்பெக்டர் கதாநாயகியை கற்பழிப்பது போலவும், அடிக்கடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜட்டியோடு நிற்பது போலவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது.
போலீசை இழிவுபடுத்தும் காட்சிகள் நீக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். இந்த படத்திற்கு அனுமதி கொடுத்த மத்திய அரசின் சென்சார் போர்டுக்கும், இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்படும்.
நேபாளி படத்தை பார்ப்பவர்களுக்கு போலீசாரை பற்றி மிகவும் தவறான எண்ணம் ஏற்படும். விசாரணைக்கு வரும் போலீசார் மீது இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும்.
போலீஸ் மீதான நம்பிக்கையை குலைக்கும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் அனுமதியோடு இந்த நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது என்றார் ரவி.
இதற்கிடையே, நேபாளி படம் நீளமாக இருப்பதாகவும், பல காட்சிகள் தேவையில்லாமல் இருப்பதாகவும் பேச்சு எழுந்ததால், அப்செட் ஆன பரத், இயக்குநர் துரையிடம் தேவையில்லாத காட்சிகளை வெட்டி விடுமாறு கோரிக்கை விடுத்தாராம்.
குறிப்பாக சீரியல் கொலைகளுக்கான காரணம் குறித்து படத்தில் சரியான விளக்கம் இல்லாதது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதையும் சரி செய்யுமாறு துரையிடம் பரத் கேட்டுக் கொண்டாராம்.
இதையடுத்து படத்தின் 2ம் பகுதியில் பல காட்சிகளை நீக்கியுள்ளாராம் துரை. இதன் மூலம் படத்தின் பிற்பாகுதியில் குறைவாக இருந்த விறுவிறுப்பு தற்போது கூடியுள்ளதாம்.