Don't Miss!
- Finance தங்கம் விலை வரலாற்று உச்சம்.. மீண்டும் மீண்டுமா.. எப்பதான் தங்கம் வாங்க முடியும்..?!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
போராளி... ஈழத்துப் பின்னணியில் சசிகுமார் நடிக்கும் படம்!
சுப்பிரமணியபுரம் படத்தை தயாரித்து இயக்கி ஹீரோவாகவும் நடித்தவர் சசிகுமார். பின்னர் நாடோடிகள் படத்திலும் நடித்து வெற்றி பெற்றார்.
அடுத்து சசிகுமாரும் சமுத்திரக்கனியும் கைகோர்த்துள்ள படம் போராளி. ஈழத் தமிழர்கள் மீதான அடக்குமுறை, விடுதலைப் புலிகள் போராட்டம் போன்றவை இப்படத்தில் காட்சிபடுத்தப்படுகின்றன. பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்துக்கு நாயகி தேர்வு நடக்கிறது.
முதலில் அஞ்சலியை நாயகியாக முடிவு செய்தனர். ஆனால் நாயகி கேரக்டருக்கு த்ரிஷா பொருத்தமாக இருப்பார் என சமுத்திரக்கனி விரும்பியதால், இப்போது அவரிடம் பேச முடிவு செய்துள்ளனர்.
இதுபற்றி த்ரிஷாவிடம் கேட்டபோது, 'போராளி படத்தில் நடிக்க சசிகுமாரோ, சமுத்திரக்கனியோ இதுவரை என்னிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை', என்றார்.
த்ரிஷா தற்போது இரு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அஜீத்துடன் மங்காத்தா படத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் அவர் நடித்து வெளியான தீன் மார் தெலுங்குப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. எனவே த்ரிஷா இந்தப் படத்தில் நடிப்பது படத்தை தெலுங்கிலும் பெரிய வரவேற்பைத் தரும் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்யத் திட்டமிட்டுள்ளனராம்.
இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்குகிறது.