ராஜ்குமாருக்கு பெங்களூரில் 13 அடி வெண்கல சிலை!

கன்னட சினிமா மற்றும் அரசியலில் தனிப்பெரும் சக்தியாகத் திகழ்ந்தவர் ராஜ்குமார். இரு ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த (ஏப்ரல் 12, 2006) ராஜ்குமாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பெங்களூரில் பிரமாண்ட சிலை வைக்க கர்நாடக அரசு ஏற்பாடு செய்துவருகிறது.
ரூ.22 லட்சம் செலவில், 2000 கிலோ வெண்கலம் கொண்டு உருவாக்கப்படும் இந்த சிலையை வடிப்பவர் நாகராஜ் என்ற சிற்பி. இவர் ராஜ்குமாரின் பரம ரசிகராம்.
கடந்த ஆண்டே முடிந்திருக்க வேண்டிய இந்த சிலையின் பணிகள், கர்நாடக அரசு செலவுக்கு சரியாக பணம் கொடுக்காததால் தாமதமாகி விட்டதாம்.
சிலையின் இறுதிக்கட்டப் பணிகள் இந்த மாதம் முடிந்து விடும் என்றும், பெங்களூர் டவுன்ஹால் பார்க்கில் இந்தச் சிலையை நிறுவ தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications