Don't Miss!
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'ஜிப்' அவிழ்த்த விவகாரம்: அக்ஷய் குமார் கைதாகி விடுதலை!
மும்பையில் கடந்த மார்ச் மாதம் நடந்த லேக்மே பேஷன் ஷோவில் நடிகர் அக்ஷய் குமார் கலந்து கொண்டார். அப்போது அவரது பேண்ட் ஜிப்பை, அனைவரது முன்னிலையிலும் அவரது மனைவி டுவிங்கிள் கழற்றி விட்டார்.
நிகழ்ச்சியை நேரில் மற்றும் தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, பொது நிகழ்ச்சியில் ஆபாசமாக நடந்து கொண்டதாக, அனில் நாயர் என்பவர் தான் சார்ந்த பொது நல சங்கம் சார்பில் போலீசில் புகார் கொடுத்தார். வகோலா போலீசார் அக்ஷய் குமார் மீதும், அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால் அவரை உடனடியாக போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. காரணம் வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்கு சென்றிருந்தார் அக்ஷய். நேற்றுதான் விமானம் மூலம் மும்பை வந்தார். வழக்கு குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் தனது வக்கீலுடன் சென்று போலீசிடம் சரண் அடைந்தார்.
உடனே அவரை போலீசார் கைது செய்து, ஜாமீனில் விட்டனர். அக்ஷய் குமாரின் மனைவி டுவிங்கிளும் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடப்பட்டார்.