twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பால்கே விருது கடவுள் தந்த பரிசு - மன்னா டே

    |

    Manna Dey
    தாதா சாஹேப் பால்கே விருது கடவுள் தந்த பரிசு என்று கூறியுள்ளார் பழம்பெரும் பாடகரான மன்னா டே.

    இந்தித் திரையுலகின் முடி சூடா பின்னணிப் பாடர்களில் ஒருவரான மன்னா டேவுக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து அவர் உணர்ச்சிவசப்பட்டு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், எனக்கு இந்த விருதை அளிப்பது சரியானது, பொருத்தமானது என்று அரசு நினைத்துள்ளது. இது எனக்கு இனிமையான அதிர்ச்சி ஆகும். இது கடவுளின் பரிசு. இதை முழு மனதுடன் ஏற்கிறேன்.

    இருப்பினும் திரையுலகின் தலை சிறந்த இசை மேதைகளுக்கு இதை அர்ப்பணிக்கிறேன்.

    சங்கர் - ஜெய்கிஷன், மதன் மோகன், சச்சின் தேவ் பர்மன் ஆகியோர்தான் என்னாலும் பாட முடியும் என்பதை நிரூபித்தவர்கள். என்னைப் பாட வைத்தவர்கள். அவர்களை நான் மறக்க மாட்டேன் என்றார் மன்னா டே.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X