ஆரோவில்லில் நர்த்தகி படத்திற்குக் கெளரவம்
அரவாணிகளின் மறுபக்கத்தை நெகிழ்ச்சியூட்டும் வகையில் விவரித்த நர்த்தகி திரைப்படம், புதுவை ஆரோவில்லில் குடியிருப்புவர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்படுகிறது.
ஆரோவில் மக்கள் சிறந்த, தரமான திரைப்படங்களை மட்டுமே தங்களது மையத்தில் திரையிட்டுப் பார்ப்பது வழக்கம். அந்தவகையில், விஜயபத்மா இயக்கத்தில், அரவாணி கல்கி சுப்ரமணியத்தின் நடிப்பில் உருவான நர்த்தகி திரைப்படம் அங்கு நாளை மாலை 7.30 மணிக்குத் திரையிடப்படுகிறது.
இதில் விசேஷம் என்னவென்றால் கல்கி, ஆரோவில்லில் 2 வருடங்கள் வசித்துள்ளார். இதுவும் கூட நர்த்தகி திரைப்படத்தில் அழகுற விவரிக்கப்பட்டுள்ளது.
ஆரோவிலில் வசித்து வரும் 48 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நாட்டினருக்காக பிரத்யேகமாக திரையிடப்படுவது விசேஷமானது.
நாளை இரவு 7.30 மணிக்கு ஆரோவில் டவுன்ஹால், எம்எம்சி ஆடிட்டோரியத்தில் நர்த்தகி திரையிடப்படுகிறது. நிகழ்ச்சியில், இயக்குநர் விஜயபத்மா, நாயகி கல்கி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.


Click it and Unblock the Notifications











