Don't Miss!
- Sports பட்டிதரால் தப்பித்த ஆர்சிபி.. ட்விஸ்ட் கொடுத்த உனாத்கட்.. ஐதராபாத் அணிக்கு சவாலான இலக்கு!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: 1202 வேட்பாளர்கள்..15.88 கோடி வாக்காளர்கள்;1.67 லட்சம் வாக்குச் சாவடிகள்!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பிக்பாஸ் நிகழ்ச்சியை நள்ளிரவுக்கு மாற்றும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை!
இதனை எதிர்த்து கலர்ஸ் சேனல் வழக்கு தொடர்ந்துள்ளது.
ஆபாசம் மற்றும் இளைஞர்களைக் கெடுக்கும் வகையில் உள்ள டிவி நிகழ்ச்சிகள் பற்றி மத்திய தகவல்ஒலிபரப்புத் துறை சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது.
இதில் சில நிகழ்ச்சிகளை குடும்பத்தோடு பார்க்கும் பிரைம் டைமில் ஒளிபரப்பக் கூடாது என உத்தரவிடப்பட்டது. இதில் கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. பாப் பாடகியும் நடிகையுமான பமீலா ஆண்டர்ஸன் இதில் பங்கேற்றுள்ளார்.
நிகழ்ச்சியை நள்ளிரவுக்கு மாற்றியதை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
மத்திய அரசு உத்தரவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தயாரிக்க ஏற்கனவே ரூ.100 கோடி செலவிட்டு இருப்பதாகவும் முக்கிய நேரத்தில் நிகழ்ச்சியை ஒளிபரப்புவதாக சொல்லி விளம்பரங்கள் வாங்கப்பட்டு உள்ளதாகவும் நிகழ்ச்சியை நள்ளிரவுக்கு மாற்றுவதை விளம்பரதார்கள் ஏற்க வில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பபட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை நள்ளிரவுக்கு மாற்றும் மத்திய அரசின் உத்தரவக்கு இடைக்கால தடை விதித்தனர்.