Don't Miss!
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'தலைவாசல் விஜய்'க்கு கேரளா தந்த கவுரவம்!
அவரது இந்த ஏக்கத்தைப் போக்கியுள்ளது மலையாளத் திரையுலகம்.
'யுகபுருஷன்' என்ற படத்தில் ஸ்ரீநாராயண குரு கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 'தலைவாசல்' விஜய்க்கு கேரள அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது.
சமீபத்தில் நிருபர்களைச் சந்தித்த தலைவாசல் விஜய், இதுகுறித்து கூறுகையில், "ஒரு கலைஞனுக்குப் பெரிய கௌரவமே பாராட்டுதான். அது ஸ்ரீநாராயண குரு பாத்திரத்தில் நடித்ததற்காகக் கிடைத்துள்ளது. பெரிய சம்பளம் பெற்றால் கூட கிடைக்காத மகிழ்ச்சியை நான் உணர்கிறேன்.
ஸ்ரீநாராயண குருவை கேரளாவின் பெரியார் என்று சொல்லலாம். ஜாதி- மத ஏற்றதாழ்வுகளுக்கு எதிராகப் போராடிய போராளி அவர்.
ஒருமுறை காந்தி குருவைச் சந்தித்தபோது, 'குருவே! நீங்கள் அமர்ந்திருக்கிற இந்த மாந்தோப்பில் எத்தனையோ மாமரங்கள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு மர இலையும் வெளிர் பச்சை, அடர் பச்சை என்று மாற்றங்களோடு உள்ளதே? சமுதாயத்திலும் ஜாதி ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தானே செய்யும்?' என்று கேட்டாராம்.
அதற்கு குரு, 'நிறத்தில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் எல்லா மரத்தின் இலைகளையும் பிழிந்து சுவைத்தால் சுவை ஒன்றாகத்தான் இருக்கும்' என்றாராம். அதோடு மகாத்மா விவாதத்தை நிறுத்திக் கொண்டாராம்.
அப்படிப்பட்ட ஒரு புரட்சிகரமான குருவின் கதாபாத்திரத்துக்கு என்னை சிபாரிசு செய்தவர்கள் மம்முட்டியும் மோகன்லாலும் என்று தெரிந்தபோது ஆச்சரியப்பட்டுப் போனேன். தமிழ் கலைஞர்களையும் டெக்னீஷியன்களையும் மலையாளப் படஉலகினர் ரொம்பவும் மதிக்கிறார்கள். ஸ்ரீநாராயண குரு அருளால் இப்போது பத்துக்கும் மேற்பட்ட மலையாளப் பட வாய்ப்புகள் வந்துள்ளன!'' என்கிறார் சந்தோஷத்துடன்.