Don't Miss!
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சிறுமி-தவளை திருமணம்: குஷ்பு கொதிப்பு
சென்னையில் நடந்த ரிட்ஸ் இதழின் விருது வழங்கும் விழாவில் குஷ்பு பேசுகையில்,
விழுப்புரம் அருகே பள்ளிப்பட்டு கிராமத்தில் தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம் நடந்ததுள்ளது. ஊர் நலனுக்காக கிராமத்தினர் கூடி இந்த திருமணத்தை நடத்தி வைத்ததாகத் தெரிவித்துள்ளனர்.
ஊர் செழிக்கவும், நோய் நொடி வராமல் இருக்கவும் வீடுகள் தீப்பற்றி எரியாமல் இருக்கவும் இந்த திருமணத்தை நடத்தினார்களாம்.
நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம்? விஞ்ஞானம் வளர்ந்துள்ள இந்தக்காலத்தில் இது போன்ற ஒரு திருமணம் நடந்திருப்பது மூட நம்பிக்கையில் மக்கள் இன்னும் சிக்கிக் கிடப்பதையே காட்டுகிறது.
இந்தியா சந்த்ராயன் விண் கலத்தை பறக்கவிட்டுள்ளது. இளம் தலைமுறையினர் ஐ.டி. போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி எவ்வளவோ வளர்ச்சி ஏற்பட்டு வரும் இக் காலத்தில் சிறுமிக்கும், தவளைக்கும் திருமணம் நடத்தி இருப்பது வேதனை அளிக்கிறது. இந்த மூட நம்பிக்கைக்கு எதிராக பெண்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றார் குஷ்பு.