Don't Miss!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நடிகை வனிதா மீது வக்கீல் கொலை மிரட்டல் புகார்
நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதாவும், முதல் கணவர் ஆகாஷூம் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு பிறந்த மகன் விஜய் ஸ்ரீ ஹரி (9) தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகாஷ் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக நடிகை வனிதா, அவரது 2-வது கணவர் ஆனந்தராஜ் ஆகியோர் உயர்நீதிமன்றத்துக்கு வந்தனர். அப்போது, அங்கு வந்த ஆகாஷின் வக்கீல் சசிகுமாரிடம் (36) அவர்கள் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், வக்கீல் சசிகுமார் சென்னை உயர்நீதிமன்ற போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், ''நான் ஆகாஷ் வழக்கில் ஆஜராகி வருகிறேன்.
வழக்கில் ஆஜராகிவிட்டு, நீதிமன்ற படியில் இறங்கி வரும்போது, நடிகை வனிதா, அவரது 2-வது கணவர் ஆனந்தராஜ், அவரது நண்பர் ஜாகீர் ஆகிய 3 பேர் என்னை தள்ளிவிட்டு சண்டை போட்டனர். உன்னால்தான் இவ்வளவு பிரச்சினையும் வந்தது என்று, எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் மனு தொடர்பாக, சப்-இன்ஸ்பெக்டர் வேணு கோபால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.