Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தமிழ் சினிமாவை ஆளும் மதுரை!-பாலச்சந்தர்
முதல் படத்தில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அடுத்த படத்தையும் தானே இயக்குவது நடிப்பது என அகலக்கால் வைக்காமல், நிதானமாக ஒரு படத்தைத் தயாரித்தார். அதுதான் 'பசங்க'. படம் அனைவர் மத்தியிலும் சசிகுமாருக்கு புதிய மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது அடுத்ததாக, தான் கதாநாயகனாக நடிக்க, சமுத்திரக்கனி இயக்கும் நாடோடிகள் படத்தில் முழுக் கவனத்தையும் செலுத்தத் துவங்கியுள்ளார்.
இந்தப் படம் முடிந்த பிறகுதான் தனது இயக்கத்தில் உருவாகும் படம் குறித்த அறிவிப்பை வெளியிடவிருக்கிறார் சசிகுமார்.
பெரும் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நாடோடிகள் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இயக்குநர்கள் பாலச்சந்தர், பாலா, அமீர் மற்றும் சேரன் கலந்து கொண்ட இந்த விழாவில் நாடோடிகள் படத்தின் இரு பாடல்கள் திரையிடப்பட்டன.
பாடலை வெளியிட்ட பிறகு பேசிய பாலச்சந்தர், தமிழ் திரையுலகையே மதுரைதான் இன்று ஆள்கிறது. அன்றைக்கு பாரதிராஜா, இளையராஜா என்றால், இன்றைக்கு பாலா, அமீர், சசிகுமார், சமுத்திரக்கனி மற்றும் சேரன் என எங்கும் மதுரைக்காரர்கள் மயம். நல்ல படைப்பாளிகள் இங்கிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
சசிகுமார் மற்றும் சமுத்திரக் கனியின் கடின உழைப்பு மற்றும் நேர்த்தியான படைப்பாற்றலைப் புகழ்ந்தார் சேரன்.