Don't Miss!
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- News பிறந்தது சென்னை தான்.. ஆனா கன்னடா தெரியுமா? பிரசாரத்தில் தமிழர்களிடம் சிவராஜ் குமார் திடீர் கேள்வி
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பாலிவுட் படங்களில் நடிக்க ரெடி .. பார்வதி ஓமனக்குட்டன்
நல்ல படங்களாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன், ஆனால் தற்போது எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை. அந்த ஓய்வை முடித்து விட்டு வந்த பிறகு, வாய்ப்புகள் வந்தால் நிச்சயம் நடிப்பேன் என்கிறார் அவர்.
மிஸ் வேர்ல்ட் பட்டப் போட்டியில் பங்கேற்க ஜோஹன்ஸ்பர்க் நகருக்குச் சென்றிருந்த பார்வதி ஓமனக்குட்டன் நேற்று அதிகாலை தாயகம் திரும்பினார்.
மும்பை திரும்பிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். இருப்பினும் சினிமாதான் எனது எதிர்காலமா என்பதை நான் இன்னும் தீர்மானிக்கவில்லை.
முதலில் நான் நீண்ட ஓய்வை எடுக்கப் போகிறேன். அதன் பிறகு என்னைத் தேடி நல்ல பட வாய்ப்புகள் வந்தால் நிச்சயம் ஏற்பேன் என்றார் அவர்.
மிஸ் வேர்ல்ட் போட்டி குறித்து கேட்டபோது, நான் சிறப்பாகதான் செய்தேன். பட்டத்தைப் பெறத் தவறியது ஏமாற்றமாக உள்ளது.
தொடர்ந்து மாடலிங்கில் இருப்பேன். மிஸ் வேர்ல்ட் அனுபவம் சிறப்பாக இருந்தது. நிறைய தோழிகள் கிடைத்தனர்.
ஒரு நடுத்தர வர்க்கத்துப் பெண்ணுக்கு இந்த அளவுக்கு அங்கீகாரம் கிடைத்தது பெருமையாக உள்ளது. கனவு நனவானதாக உணர்கிறேன்.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு ஆளான தாஜ் மஹால் ஹோட்டல் மற்றும் ஓபராய் ஹோட்டலுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளேன். அங்கு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் போகிறேன். எனது தந்தை தாஜ் மஹால் ஹோட்டலில்தான் பணியாற்றி வருகிறார் என்றார் பார்வதி.