Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ராமேஸ்வரம் பேரணி: நடிகர்-நடிகைகள் வரவில்லை!
ராமேஸ்வரம் பேரணியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தாராளமாகச் செல்லலாம் என்று நடிகர் சங்கம் அறிவித்தாலும், நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடக்கும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றால் போதும் என்ற நினைப்பில் நடிகர் நடிகைகள் யாரும் ராமேஸ்வரம் செல்லவில்லை.
பாக்கியராஜ், ராஜேந்தர், அமீர், பாண்டியராஜன் போன்றோர் நடிகர்களாக மட்டுமல்லாமல், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு சங்கங்களில் இருப்பதால் அவர்கள் மட்டும் இந்த பேரணியில் பங்கேற்கிறார்கள்.
இந்தப் பேரணியில் கலந்து கொள்ள எந்த நடிகையும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பாரதிராஜா, வராதவர்களைப் பற்றி நாம் பேசுவது வீண் வேலை. நமக்கு நிறைய வேலை இருக்கிறது. தமிழுணர்வில் இங்கு வந்திருக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு நன்றி. யார் வந்தார்கள் என்று இனி பார்க்கத் தேவையில்லை. உணர்வைக் காட்டுவதுதான் முக்கியம் என்றார்.