Don't Miss!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'இம்சை' நாயகிகள்-சுந்தர்.சி டென்ஷன்
தெலுங்கில் வெற்றி பெற்ற படம், ஆக்ஷன் துரியோதனா. இப்படம் 'தீ' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஜி.கிச்சா இயக்கும் இப்படத்தில் சுந்தர் சி ஜோடியாக நமீதாவும் ராகிணியும் நடித்துள்ளனர்.
உங்கள் படங்களில் நிறைய புது நடிகைகளை மட்டுமே நடிக்க வைப்பது ஏன்? என்ற கேள்விக்கு சமீபத்தில் சுந்தர் அளித்துள்ள பதில் சுவாரஸ்யமானது.
நான் இயக்குனராக இருந்த போதும், சரி, இப்போதும் சரி புதுமுகங்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதையே விரும்புகிறேன். ஏனெனில் அவர்கள்தான் எந்த பிரச்சினையும் இல்லாமல் நடித்துக் கொடுக்கிறார்கள். அதே சமயம் முன்னணி நடிகைகள் செய்யும் இம்சை தாங்க முடிவதில்லை. அவர்கள் கேட்கும் சம்பளமும் அதிகம் உள்ளது.
அதனால்தான் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்க விரும்புகிறேன். தீ படத்தில் ராகிணி என் மனைவியாகவும், நமீதா காதலியாக வந்து அரசியல்வாதியாக மாறும் வேடத்திலும் நடித்துள்ளனர் என்றார்.
மேலும் விரைவிலேயே ரூ.15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் புதுப்படம் ஒன்றை இயக்கி நடிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
சுந்தர்.சி சொல்லும் காரணம் தீயாக இருக்கிறது!