twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்ப் படங்களுக்குப் போட்டி!

    |

    5th Chennai International film festival
    சென்னையில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ள தமிழ் திரைப்படங்களுக்கு போட்டி நடத்தி விருதுக்குரிய படத்தைத் தேர்வு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தோ சினி அப்ரிசியேஷன் அமைப்பு ஆண்டுதோறும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்துகிறது. இந்த முறை இந்த விழாவில் பங்கேற்கும் தமிழ் திரைப்படங்களுக்குப் போட்டி முறையை ஏற்படுத்தி அதில் முதலிடம் பிடிக்கும் படத்துக்கு ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் விருது வழங்கப்படும் என அந்த அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இரண்டாவது சிறந்த படத்துக்கு ரூ 2 லட்சம் பரிசு மற்றும் விருதும் வழங்கப்படும். நடுவர் சிறப்பு விருதாக ரூ.1 லட்சமும் விருதும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 15, 2008-ம் தேதி முதல் அக்டோபர் 15, 2009-ம் தேதிக்குள் சென்சார் செய்யப்பட்ட படங்கள் இந்தப் போட்டிக்கு தகுதி பெற்றவை. இதற்கான விண்ணப்பங்களை ஜெமினி பார்ஸன் வளாகத்தில் அமைந்துள்ள இந்தோ சினி அப்ரிசியேஷன் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X