Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'பந்தயம்' மீது வழக்கு
இதோ... இன்றைய வழக்கு!
இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கி வரும் பந்தயம் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் உதவி இயக்குனர் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்குத் தொடர்ந்தவர் பெயர் சுரேஷ். எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்தான் இவர்.
தனது மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
சில ஆண்டுகளுக்கு முன்பு 'முரட்டுப் பயல்' என்ற பெயரில் கதை ஒன்றை எழுதி சினிமா எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருந்தேன். இதுகுறித்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரிடமும் கூறினேன். அவர் படம் எடுக்க சம்மதித்தார். ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் அவர் அந்தக் கதையை எடுக்கவில்லை.
பின்னர் இயக்குனர் பி.வாசுவிடம் கதை கூறினேன். அவர் தனது மகன் சக்தியை கதாநாயகனாக வைத்து 'ஆர்ப்பாட்டம்' என்ற பெயரில் இதனை படமாக எடுத்து வருகிறார். அந்தப் படத்தை நானே இயக்கியும் வருகிறேன்.
இந்நிலையில் 'முரட்டுப்பயல்' கதையை அடிப்படையாகக் கொண்டு 'பந்தயம்' என்ற பெயரில் எஸ்.ஏ.சந்திரசேகர் புதிதாக படம் எடுத்து வருகிறார். உண்மையில் அது என்னுடைய கதை. எனவே அந்த படத்துக்கு தடை விதிக்கவேண்டும், என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு இன்று 8வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி பால்ராஜ் பதில் மனு தாக்கல் செய்யும்படி இயக்குனர் சந்திரசேகருக்கும், வி.ஜே. பிலிம்ஸ் பட நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
மேலும் வழக்கு விசாரணையை வரும் 26ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!