Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சுடலைவடிவை அலைகழித்த போலீஸ்..
முன்னதாக இவர் அசின், நல்லமுத்துக்குமார் குறித்து சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் கொடுத்த புகார் மனுவை அவர் செங்குன்றம் போலீசாரிடம் விசாரிக்கக் கொடுத்துள்ளார்.
இதை விசாரித்த செங்குன்றம் போலீசார் சுடலைவடிவின் வீடு சோழவரம் காவல் நிலைய எல்லைக்கு உள்ளே வருவதை 'கண்டுபிடித்து' சோழவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும்படி அனுப்பி வைத்துவிட்டனர்.
இதையடுத்து சோழவரம் காவல் நிலையத்தில் சுடலை வடிவு புகார் கொடுக்க சென்றபோது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் நசீர், இது சென்னை புறநகர் கமிஷனர் எடுக்க வேண்டிய நடவடிக்கை. என்னிடம் கொடுத்து என்ன பலன் என்று திருப்பி அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து சுடலை வடிவு, காவல் நிலைய எல்லை காரணமாக போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். என் மகனை கொலை செய்துவிட்டார்களா, அல்லது உயிருடன்தான் இருக்கிறானா என்று தெரியவில்லை. எனவே நான் தமிழக முதல்வரிடம் புகார் தரப் போகிறேன் என்றார்.
சுடலைவடிவிடம் டிஎஸ்பி விசாரணை:
இந் நிலையில் இன்று சுடலைவடிவிடம் பொன்னேரி டிஎஸ்பி ரங்கராஜன் விசாரணை நடத்தினார். பின்னர் திருவள்ளூர் போலீஸ் எஸ்பி சாரங்கனை சந்திக்க அவரை போலீஸ் ஜீப்பில் அழைத்து சென்றார்.