Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மீண்டும் விசாரணைக்கு வரும் கிரகலட்சுமி வழக்கு!
நடிகர் பிரசாந்துக்கும் சென்னையைச் சேர்ந்த கிரகலட்சுமிக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றனர்.
இந் நிலையில் 1998ம் ஆண்டு கிரகலட்சுமி, நாராயண வேணு பிரசாத் என்பவரை முதல் திருமணம் செய்து அதை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே நாராயண வேணு பிரசாத் மீது கிரகலட்சுமி சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார்.
அதில், தனக்கும், நாராயண வேணு பிரசாத்துக்கும் திருமணம் நடக்கவில்லை. ஆனால் அவர் போலியான ஆவணங்கள் மூலம் திருமணம் நடந்ததாக பொய் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்று கூறி இருந்தார்.
இந்த வழக்கை சைதாப்பேட்டை 18வது கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து கிரகலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி நாகமுத்து விசாரித்தார். கிரகலட்சுமி தொடர்ந்த வழக்கை சைதாப்பேட்டை கோர்ட்டு மீண்டும் விசாரித்து 2 மாதத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து வேணுபிரசாத்-கிரகலட்சுமி முதல் திருமண வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுகிறது.