Don't Miss!
- Finance தங்கம் விலை வரலாற்று உச்சம்.. மீண்டும் மீண்டுமா.. எப்பதான் தங்கம் வாங்க முடியும்..?!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஸ்ரேயா, ரகசியா, நயன், நமீதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திரைப்படங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதையும், ஆபாச உடைகளை அணிந்து நடிப்பதையும் கண்டித்து சென்னையில் மனித உரிமைகள் கழகத்தின் சார்பில் பெண்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ் சினிமாவில் ஆபாசம் அதிகரித்துக் கொண்டே போகிறது. உடை என்ற பெயரில், எதையாவது அரைகுறையாக போட்டுக் கொண்டு ஆபாசமான நடனங்களைப் புகுத்தி விடுகிறார்கள். கேட்டால், மக்கள் இதை ரசிக்கிறார்கள் என்று மக்கள் தலை மீது குற்றத்தை தள்ளி விடுகிறார்கள்.
கலாச்சாரச் சீரழிவின் மொத்த அடையாளமாக தமிழ் சினிமாப் படங்கள் மாறி வரும் நிலையில், திரைப்படத்தில் பெண்களை ஆபாசமாக காட்டுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தின் சார்பில் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை அரசு விருந்தினர் மாளிகை அருகே மனித உரிமைகள் கழகத்தின் சார்பாக 500 பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இரட்டை அர்த்த வசனக் காமெடி...
காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் திரைப்படங்களில் இடம் பெறுவதையும், பெண்களை ஆபாசமாக படம் எடுத்து காட்டுதவற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நடிகைகள் நமீதா, நயனதாரா, ஸ்ரேயா, ரகசியா ஆகியோர் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிக்கிறார்கள் என்று அவர்களுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
குறைக்காதே குறைக்காதே பெண்களின் ஆடைகளை குறைக்காதே, கெடுக்காதே கெடுக்காதே தமிழ் கலாச்சாரத்தை கெடுக்காதே போன்ற கோஷங்களையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தை பெருமளவிலான மக்கள் திரண்டு நின்று பார்த்தனர்.