Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஒரு டிவி தொடரும் திகில் படமும்!
டிவி தொடர்களால் பல குடும்பங்கள் சிதறிப் போய் வருவதாக நிறைய செய்திகள் படித்துள்ளோம். ஆனால் ஒரு தொடரால் குடும்பமே பயந்து போகும் கதைதான் இந்த யாவரும் நலம் படத்தின் கதை.
ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், 13-பி என்ற எண்ணுள்ள வீட்டில் நடக்கும் கதைதான் இப்படத்தின் கதை.
அதாவது டிவியில் யாவரும் நலம் என்ற பெயரில் ஒரு தொடர் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரில் வரும் நிகழ்வுகள் அனைத்தும் அப்படியே படத்தின் நாயகன், நாயகி குடும்பத்திலும் நடக்கிறது.
இதனால் சுவாரஸ்யமாகும் தம்பதிகள் தொடர்ந்து தொடரைப் பார்த்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் திடுக்கிடும் சம்பவங்கள் தொடரில் வருகின்றன.
இதனால் குழம்பிப் போகும் நாயகனும், நாயகியும், நமது வீட்டிலும் அப்படி நடக்குமோ என்று அஞ்சுகின்றனர். நடக்கிறதா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தில் மாதவனும், நீத்து சந்திராவும் படு இயல்பாக நடித்துள்ளனராம். சரண்யாவும் படத்தில் இருக்கிறார்.
இப்படத்தை அப்படியே 13-பி என்ற பெயரில் இந்தியிலும் கொடுக்கிறார் விக்ரம் குமார்.
பேய், பிசாசு இல்லாமல் திகில் மட்டுமே நிறைந்திருக்கும் படம் இது. அனைவரையும் ரசிக்க வைக்கும், கூடவே சற்று பயப்படவும் வைக்கும், டிவி தொடர்களின் பாதிப்புகளையும் இதில் அலசியுள்ளேன் என்கிறார் விக்ரம் குமார்.
நல்லது.