Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ராகவேந்திரா மண்டபம் மீது கல்வீச்சு என வதந்தி!
ஜாகுவார் தங்கம் என்ற ஸ்டன்ட் மாஸ்டர் அஜீத் விவகாரத்தில் கிளப்பியுள்ள பிரச்சனையில் தேவையின்றி ரஜினி பெயர் இழுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் சிலர் ஜாகுவார் தங்கம் வீடு மீது கல்வீசியதாகவும் கூறப்பட்டது.
இந் நிலையில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ஜாகுவாரின் ஆட்கள் சிலர் கல் வீசி தாக்குவதாக தகவல் பரவியது. இதை தொடர்ந்து அங்கு ஏராளமான ரஜினி ரசிகர்கள் குவிந்தனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு அது போன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை.
ராகவேந்திரா மண்டப நிர்வாகி சுதாகரிடம் இதுபற்றி கேட்டபோது, 'கல்வீச்சு, கலாட்டா என எந்த சம்பவமும் நடக்கவில்லை. தேவையில்லாத பிரச்சனை வேண்டாம்' என்றார். ரசிகர்களையும் சமாதானப்படுத்தி அனுப்பினார்.
அப்போது அங்கு கூடியிருந்த ரஜினி ரசிகர்கள் கூறியதாவது:
நடிகர் அஜீத்குமார் விழா ஒன்றில், நடிகர்களை கட்டாயப்படுத்தி விழாக்களுக்கு அழைக்க கூடாது என்று கருத்து தெரிவித்தார். இதற்கு எங்கள் தலைவரும் ஆதரவு தெரிவித்தார்.
ஆனால் இந்த கருத்தை ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மொழி ரீதியாகவும், சாதி ரீதியாகவும் திரித்து பிரச்சனையை திசை திருப்பி வருகிறார். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
எங்கள் தலைவர் தமிழுக்கும், தமிழர்களுக்காகவும் வாழக் கூடியவர்... எதிரிக்கும் அன்பு காட்டுபவர். அவரை இப்படியெல்லாம் பேச இந்த நபர்களுக்கு நாக்கு கூசவில்லையா? தன் தொழிலில், தன் சமூக சேவையில் மட்டும் கவனம் செலுத்தி நல்ல தமிழராக வாழும் எங்கள் தலைவரை தேவையின்றி சீண்டினால் இனியும் சும்மா இருக்க மாட்டோம் என்றனர் ஆவேசத்துடன்.