Don't Miss!
- News கொய்யாப்பழத்தை பார்த்ததுமே.. பாய்ந்து வந்த 2 ஆடுகள்.. பின்னாடியே ஓடிசென்ற முருகன்.. திணறிய தென்காசி
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மீரா-ரீமா போட்டா போட்டி!
தெலுங்கில் ரீமா சென் நடித்த முதல் திரைப்படம் எமகோலா. இந்தப் படத்தை இப்போது தமிழுக்குக் கொண்டு வருகிறார்கள், இந்திரலோக இளவரசன் எனும் பெயரில். கவர்ச்சியில் ஏற்கெனவே வெளுத்துக் கட்டும் ரீமா, தெலுங்கு தேச அன்பர்களுக்காக இந்தப் படத்தில் ஸ்பெஷல் கவர்ச்சி தரிசனம் தந்திருந்தார்.
மேலும் இந்தப் படத்துக்காக மீரா ஜாஸ்மினுடன் போட்டி நடனம் ஒன்றிலும் ஆடியுள்ளார் ரீமா.
ஜெமினிகணேசன் நடித்த வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் பத்மினியும், வைஜயந்திமாலாவும், 'சாதுர்யம் பேசாதேடீ...என் சலங்கைக்கு பதில் சொல்லடீ..'' என்று போட்டி நடனம் ஆடுவார்களே.... அப்படியொரு போட்டி நடனப் பாட்டு அது. ஆனால் அந்த மாதிரி பாரம்பரிய நடனம் இதில் கிடையாது. இளசுகளின் மனங்களை வெறியேற்றும் கலக்கல் குத்துப் பாட்டு இது.
'ரெட்ட குதிர பூட்டி ஒத்த சவாரி...' என்று தொடங்கும் இந்தப் பாடலைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் மிரண்டு போய், 32 இடங்களில் கத்தரி வைத்திருக்கிறார்கள்.
படத்தின் கதைப்படி, மீரா ஜாஸ்மின் கல்லூரி மாணவி. ரீமாசென், காபரே அழகி. வழக்கமாக, 2 கதாநாயகிகள் பங்குபெறும் படங்களில் ஒரு கதாநாயகி காதலுக்கும், இன்னொரு கதாநாயகி கவர்ச்சிக்கும் பயன்படுத்தப்படுவார்கள். ஆனால் இந்த படத்தில், ரீமாசென்னுக்கு போட்டியாக கவர்ச்சி ஆட்டம் போட்டு இருக்கிறார், மீரா ஜாஸ்மின்.
இரண்டு பேரின் கவர்ச்சி நடனமும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதே பரபரப்பை தமிழிலும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு.
படத்தின் கதை இதுதான்: இந்திரலோகத்து இளவரசன் ஒரு முக்கிய வேலையாக பூமிக்கு வருகிறான். ஒரு காபரே விடுதியில் ரீமாசென்னை சந்தித்து, அவரின் கவர்ச்சியில் மனதை பறிகொடுக்கிறான்.
தனால் ஏற்படும் விளைவுகள்தான் படம்!