Don't Miss!
- News அமவுண்டை பாதியாக குறைத்த மா.செ.க்கள்..பாதியில் பறந்த ஏஜெண்ட்கள்! என்ன இது இரட்டை இலைக்கு வந்த சோதனை?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
ரஹ்மானுக்கு விழா எடுக்கும் மத்திய அரசு!
இந்த தகவலை மத்திய அமைச்சர் அம்பிகா சோனி நேற்று அறிவித்தார்.
பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக அம்பிகா சோனி பொறுப்பேற்றுள்ளார். இவருக்குக் கீழ் இரு இணையமைச்சர்களாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெகத்ரட்சகனும், மேற்கு வங்கத்தின் சிஎம் ஜதுவாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று அமைச்சர்களும் முதல் முறையாக நேற்று புதுடெல்லியில் நிருபர்களைச் சந்தித்தனர்.
அப்போது அம்பிகா சோனி கூறியதாவது:
சமீபத்தில் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாடலாசிரியர் குல்ஸார், சவுண்ட் டிஸைனர் ரஸூல் பூக்குட்டி ஆகியோருக்கு மத்திய அரசு சார்பில் விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும். இவர்கள் இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் தனி கவுரம் பெற்றுத் தந்தவர்கள்.
நியாயமாக இந்த விழாவை முன்பே அரசு நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்போது மக்களவை தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததால் நடத்த முடியவில்லை, என்றார் அம்பிகா சோனி.
ஆஸ்கர் விருது பெற்ற பிறகு ரஹ்மானுக்கு மூன்று டாக்டர் பட்டங்களை சர்வதேச மற்றும் இந்திய பல்கலைக் கழகங்கள் வழங்கியுள்ளன குறிப்பிடத்தக்கது.