Don't Miss!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- News செ.கு. தமிழரசன் வந்துட்டாரு.. முதல் குறியே பாஜக + நிர்மலா சீதாராமன்தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு குஷி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அஜீத் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும்... ரஜினிக்கு கண்டனம்! - சினிமா சங்கங்கள் தீர்மானம்
தமிழக அரசு செய்து வரும் சலுகைகளுக்காக தமிழ் சினிமாக்காரர்கள் ஒருங்கிணைந்து முதல்வர் கருணாநிதிக்கு கடந்த பிப்ரவரி 6-ம் தேதி பாராட்டு விழா நடத்தினர். இதில் பங்கேற்றுப் பேசிய அஜீத், விழாக்களில் பங்கேற்க வருமாறு மிரட்டி அழைப்பதாக வேதனை தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சுக்கு முதல்வர் பக்கத்தில் அமர்ந்திருந்த ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி ஆதரவு தெரிவித்தார்.
எதார்த்தமான இந்த நிகழ்வை பெரும் அரசியலாக்கிவிட்டனர் சில நடிகர்கள், பெப்ஸி தலைவர் குகநாதன், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் ஜி சேகரன் மற்றும் திருமாவளவன் போன்றோர். இடையில் புகுந்து பெரும் பப்ளிசிட்டியைத் தேடிக் கொண்டார் ஜாகுவார் தங்கம் என்ற ஸ்டன்ட் நடிகர்.
இதனிடையே திரையுலகில் சமரசம் காண அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து இன்று பிலிம்சேம்பரில் சமரசக் கூட்டம் நடத்தினார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன்.
இதில் நடிகர் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் ராதாரவி, விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், சிவா, எடிட்டர் மோகன், சத்திய ஜோதி தியாகராஜன், ஆர்.கே.செல்வமணி, மாதேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அஜீத் பேச்சு பற்றி கூட்டத்தில் காரசாரமாக பேசப்பட்டது. ஒற்றுமையாக எவ்வாறு செயல்படுவது என்றும் விவாதிக்கப்பட்டது.
பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
தமிழ் திரையுலகின் சார்பில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் அஜீத்தின் உண்மையற்ற பேச்சு கலையுலகினர் அனைவரையும் மனம் புண்படச் செய்துவிட்டது. எனவே அவர் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்தாக வேண்டும்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அஜீத்தின் அந்தப் பேச்சு நடந்த பல நாட்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் அஜீத்தின் தைரியத்தைப் பாராட்டுவதாக தெரிவித்தார். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை இது புண்படுத்திவிட்டது.
இதனால் அஜீத்துக்கும் ரஜினிகாந்துக்கும் ரெட் கார்டு போடும் அளவுக்கு நிலைமை மோசமானது. தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் தலையிட்டு நிலைமையை சுமூகமாக்க முயன்றது. அதன் அடிப்படாயில் ரஜினிகாந்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இப்போதைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கண்டன அறிக்கையில் அனைத்து நிர்வாகிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.