Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அஜீத் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும்... ரஜினிக்கு கண்டனம்! - சினிமா சங்கங்கள் தீர்மானம்
தமிழக அரசு செய்து வரும் சலுகைகளுக்காக தமிழ் சினிமாக்காரர்கள் ஒருங்கிணைந்து முதல்வர் கருணாநிதிக்கு கடந்த பிப்ரவரி 6-ம் தேதி பாராட்டு விழா நடத்தினர். இதில் பங்கேற்றுப் பேசிய அஜீத், விழாக்களில் பங்கேற்க வருமாறு மிரட்டி அழைப்பதாக வேதனை தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சுக்கு முதல்வர் பக்கத்தில் அமர்ந்திருந்த ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி ஆதரவு தெரிவித்தார்.
எதார்த்தமான இந்த நிகழ்வை பெரும் அரசியலாக்கிவிட்டனர் சில நடிகர்கள், பெப்ஸி தலைவர் குகநாதன், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் ஜி சேகரன் மற்றும் திருமாவளவன் போன்றோர். இடையில் புகுந்து பெரும் பப்ளிசிட்டியைத் தேடிக் கொண்டார் ஜாகுவார் தங்கம் என்ற ஸ்டன்ட் நடிகர்.
இதனிடையே திரையுலகில் சமரசம் காண அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து இன்று பிலிம்சேம்பரில் சமரசக் கூட்டம் நடத்தினார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன்.
இதில் நடிகர் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் ராதாரவி, விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், சிவா, எடிட்டர் மோகன், சத்திய ஜோதி தியாகராஜன், ஆர்.கே.செல்வமணி, மாதேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அஜீத் பேச்சு பற்றி கூட்டத்தில் காரசாரமாக பேசப்பட்டது. ஒற்றுமையாக எவ்வாறு செயல்படுவது என்றும் விவாதிக்கப்பட்டது.
பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
தமிழ் திரையுலகின் சார்பில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் அஜீத்தின் உண்மையற்ற பேச்சு கலையுலகினர் அனைவரையும் மனம் புண்படச் செய்துவிட்டது. எனவே அவர் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்தாக வேண்டும்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அஜீத்தின் அந்தப் பேச்சு நடந்த பல நாட்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் அஜீத்தின் தைரியத்தைப் பாராட்டுவதாக தெரிவித்தார். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை இது புண்படுத்திவிட்டது.
இதனால் அஜீத்துக்கும் ரஜினிகாந்துக்கும் ரெட் கார்டு போடும் அளவுக்கு நிலைமை மோசமானது. தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் தலையிட்டு நிலைமையை சுமூகமாக்க முயன்றது. அதன் அடிப்படாயில் ரஜினிகாந்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இப்போதைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கண்டன அறிக்கையில் அனைத்து நிர்வாகிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.