இல்லாத கதைக்கு எத்தனை சண்டை!!

By Staff

Yaavarum Nalam
சற்றே சுமாரான யாவரும் நலம் படத்தை, சூப்பர் ஹிட் படமாக்க வதந்திகளை உருவாக்கும் வேலைகளில் அதன் தயாரிப்பாளரும் நாயகனும் தீவிரமாக இறங்கிவிட்டார்கள் போலிருக்கிறது.

இந்தப் படத்தின் கதை (அப்படி ஒன்று இருக்கிறதா?!) கொண்டாடிக் கொண்டு இருவர் பலமாக மோதத் தொடங்கியுள்ளனர்.

இந்தியில் 13 பி என்ற பெயரில ரிலீசாகியுள்ள இந்தப் படத்தின் கதையை விக்ரம் குமார் எழுதியதாகக் கூறப்படுகிறது. ஆனால் சத்யப்பிரகாஷ் மாங்கதனி என்பவர், இந்தக் கதை தன்னுடையது என்றும், தனக்குத் தெரியாமல் காப்பியடித்து இந்தப் படத்தை எடுத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மாதவன், நீத்து சந்திரா நடித்துள்ள இந்தப் படத்தை ஹாலிவுட்டில் ரீமேக்குவதாக ஒரு செய்தியைக் கசிய விட்டார்கள். அதற்குப் பெரிதாக ரியாக்ஷன் இல்லை. உடனே கதை காப்பி, பேடன்ட் ரைட்ஸ் என அடுத்த கட்ட பரபரப்பைக் கிளப்பிப் பார்க்கின்றனர்.

இதுகுறித்து படத்தின் நாயகன் மாதவன் கூறுகையில், படத்தின் கதை இப்போது எழுதப்பட்டதல்ல என்றும் 5 ஆண்டுகளுக்கு முன்பே விக்ரம் குமார் எழுதிவிட்டார் என்றும், படம் பெரும் வெற்றி பெற்றுவிட்டதால் இப்போது சொந்தம் கொண்டாடி வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஹாலிவுட்டுக்குப் போகும் படம் என்பதால் மிரட்டி காசு பார்க்க இப்படிச் சொல்வதாக விக்ரம் குமார் கூறியுள்ளார்.

நல்லா சொல்றாங்கய்யா டீட்டெய்லு...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X