Don't Miss!
- Sports 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ராஜபக்சேவை சந்தித்து 45 நிமிடம் பேசிய அமிதாப்!
இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற ஜூன் மாதம் 3 ந் தேதி முதல் 5 ந் தேதி வரை ஐஐஎப்ஏ எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நடக்கிறது. இதையொட்டி பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கொழும்பு நகருக்கு சென்றார்.
அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை அவரது மாளிகையில் சந்தித்தார். அப்போது அவரை ராஜபக்சேவும் அவரது மனைவி ஷிராந்தியும் வரவேற்றனர். அதிபரின் அலரி மாளிகையில் அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து அதிபர் ராஜபக்சேயுடன் சுமார் 45 நிமிடங்கள் அமிதாப்பச்சன் பேசினார். அப்போது இலங்கை, இந்திய சினிமா துறை பற்றி இருவரும் விவாதித்தனர் என்று அதிபர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இலங்கையில் சினிமா படம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக அமிதாப்பச்சன் கருத்து தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ராஜபக்சே, இலங்கையில் சினிமா துறை வளர்ச்சிக்கு இந்தியாவுடன் சேர்ந்து தனது அரசு முழு முயற்சி மேற்கொள்ளும் என்று பதிலளித்தார்.
இருவரும் இந்திய - இலங்கை கிரிக்கெட் குறித்தும் நீண்ட நேரம் உரையாடினர்.
அதிபரின் மனைவி ஷிராந்தி, தான் அபிதாப்பின் படங்களை விரும்பிப் பார்க்கும் பழக்கம் உள்ளவர் என்று தெரிவித்தார்.