Don't Miss!
- News அவ்வளவு தான்.. அதிபர் பதவியை இழக்கும் முய்சு? வெடித்த ஊழல் புகார்.. மாலத்தீவில் பெருங்குழப்பம்
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ராஜபக்சேவை சந்தித்து 45 நிமிடம் பேசிய அமிதாப்!
இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற ஜூன் மாதம் 3 ந் தேதி முதல் 5 ந் தேதி வரை ஐஐஎப்ஏ எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நடக்கிறது. இதையொட்டி பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கொழும்பு நகருக்கு சென்றார்.
அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை அவரது மாளிகையில் சந்தித்தார். அப்போது அவரை ராஜபக்சேவும் அவரது மனைவி ஷிராந்தியும் வரவேற்றனர். அதிபரின் அலரி மாளிகையில் அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து அதிபர் ராஜபக்சேயுடன் சுமார் 45 நிமிடங்கள் அமிதாப்பச்சன் பேசினார். அப்போது இலங்கை, இந்திய சினிமா துறை பற்றி இருவரும் விவாதித்தனர் என்று அதிபர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இலங்கையில் சினிமா படம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக அமிதாப்பச்சன் கருத்து தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ராஜபக்சே, இலங்கையில் சினிமா துறை வளர்ச்சிக்கு இந்தியாவுடன் சேர்ந்து தனது அரசு முழு முயற்சி மேற்கொள்ளும் என்று பதிலளித்தார்.
இருவரும் இந்திய - இலங்கை கிரிக்கெட் குறித்தும் நீண்ட நேரம் உரையாடினர்.
அதிபரின் மனைவி ஷிராந்தி, தான் அபிதாப்பின் படங்களை விரும்பிப் பார்க்கும் பழக்கம் உள்ளவர் என்று தெரிவித்தார்.