Don't Miss!
- Sports SRH vs RCB: இந்த தங்கத்த தூக்குங்க.. ஆர்சிபியை அலறவிட்ட தமிழக வீரர்.. நடராஜனால் மிரண்ட கம்மின்ஸ்!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கருணாநிதியின் 'இளைஞன்' படத்துக்காக ரூ 3 கோடியில் பிரமாண்ட கப்பல்!
ஆனால் இடம் வங்கக் கடல் அல்ல... பெரம்பூர் பின்னி மில்ஸ் வளாகம். பின்னி மில்லில் கப்பலா என்கிறீர்களா... இது சினிமா கப்பல். முதல்வர் கருணாநிதி கதை வசனம் எழுதும் 75வது படமான இளைஞனுக்காக தோட்டாதரணி போட்டுள்ள அசத்தல் செட்.
பெயர்தான் செட்டே தவிர, உள்ளே போய் பார்த்தால், 1000 பேருக்கு மேல் ஒரே நேரத்தில் தங்கலாம்... அத்தனை வசதிகள், பிரமாண்டம்!
இந்த படத்தில் பா.விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். நமீதா வில்லியாகவும், குஷ்பு அம்மா வேடத்திலும் நடிக்கிறார்கள். சுரேஷ்கிருஷ்ணா இயக்க, மார்ட்டின் தயாரிக்கிறார்.
எதற்காக இந்த கப்பல் செட்?
படத்தின் ஹீரோ பா விஜய் கூறுகையில், "இந்தியாவிலேயே முதல் முறையாக கப்பல் கட்டும் தொழிற்சாலையொன்றை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் இளைஞன்.
இது, ஒரு வரலாற்று படம். சென்னையை அடுத்துள்ள ஒரு கிராமத்தில் 1959-60-ல் சம்பவங்கள் நிகழ்வது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்தக் கப்பல். ரூ 3 கோடி வரை செலவானது. இதை நிஜமான கப்பல் கட்டும் தொழிற்சாலையி்லேயே கூட எடுத்திருக்கலாம். ஆனால் 1950களில் இருந்த சூழல் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த செட். இதைக் காண இப்போது மக்கள் ஏராளமாக வருவதால், இன்னும் ஒரு வாரம் கழித்துதான் பிரிக்கத் திட்டமிட்டுள்ளோம்..." என்றார்.
சுரேஷ்கிருஷ்ணா இயக்கும் 50 வது படம் இது.