Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
குழந்தையை வனிதாவிடம் ஒப்படைக்க ஆகாஷுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் ஆகாஷூம், நடிகை வனிதாவும் விவாகரத்து பெற்றுப் பிரிந்து விட்டனர். அவர்களின் முதல் குழந்தை விஜய் ஸ்ரீஹரி வனிதா வசம் இருக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகாஷ் மனு தாக்கல் செய்தார்.
அதில், "வனிதா மறுமணம் செய்து கொண்டுள்ளார். அவரது 2-வது கணவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 2-வது கணவர் விஜய் ஸ்ரீஹரியை சித்ரவதை செய்துள்ளார். மேலும் விஜய் ஸ்ரீஹரி வனிதாவுடன் செல்ல விருப்பம் இல்லை என்று கூறியுள்ளான். எனவே விஜய் ஸ்ரீஹரியும் ஜோவிகாவும் என்வசம் இருக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்...," என்று கேட்டி்ருந்தார்.
இந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி வி. பாலசுப்பிரமணியன் விசாரித்தார். ஆகாஷ் தரப்பில் மூத்த வக்கீல் ஆர். கிருஷ்ணமூர்த்தி மற்றும் வக்கீல்கள் இதயதுல்லா, சசிகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
வனிதா தரப்பில் நளினி சிதம்பரம் ஆஜரானார்.
அவர் கூறும்போது, "உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவின் பேரில் குழந்தையை வனிதாவிடம் ஆகாஷ் ஒப்படைக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒப்படைக்கவில்லை. இது உத்தரவை மீறும் செயல். மேலும் ஆகாஷ் மனுவுக்கு பதில் அளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும். முதலில் அவர் குழந்தையை ஒப்படைக்கட்டும்", என்றார்.
இதையடுத்து நீதிபதி இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அதில், குழந்தை விஜய் ஸ்ரீஹரியை வனிதாவிடம் வக்கீல் நளினி சிதம்பரம் முன்னிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை ஆகாஷ் ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் விஜய் ஸ்ரீ ஹரியை வனிதாவிடம் ஒப்படைக்கிறார் ஆகாஷ்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
மனோகரியின் கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!