Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'முதல்வர்' மகாத்மா!
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை சரிதத்தை, காமராஜ்- தி கிங் மேக்கர் என்ற பெயரில் இயக்கியவர் பாலகிருஷ்ணன்.
காமராஜர் குறித்த பல அரிய தகவல்களை இன்றைய இளம் தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் அற்புதமாக இருந்தது காமராஜ் படம்.
இப்போது மகாத்மாவை வைத்து தனது 2வது படத்தை எடுக்க தயாராகி விட்டார் பாலகிருஷ்ணன். ஆனால் இது மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் அல்ல. மகாத்மாவை கேரக்டராக வைத்துப் புனையப்பட்டுள்ள கற்பனைக் கதையாகும்.
இன்றைய கால கட்டத்தில் காந்தி இருந்தால் எப்படி இருக்கும். அவர் என்ன மாதிரியெல்லாம் செயல்படுவார் என்பதை தனது கற்பனைக் கதையில் சொல்லப் போகிறார் பாலகிருஷ்ணன்.
இப்படத்தில் காந்தி தேர்தலில் போட்டியிட்டு முதல்வரும் ஆகிறாராம். அதனால்தான் படத்துக்கு முதல்வர் மகாத்மா என்று பெயரிட்டுள்ளாராம் பாலகிருஷ்ணன்.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் கூறுகையில், இன்றைய சூழ்நிலையின் பின்னணியில் மகாத்மாவை நான் எனது கதாபாத்திரமாக அமைத்துள்ளேன். எல்லாமே வணிகமாகி விட்ட இன்றைய காலகட்டத்தில், காந்தி இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் விளைவே இப்படம்.
தேச ஒருமைப்பாடு உள்பட எல்லாமே இங்கு வியாபாரமாகி விட்டது. இந்தப் படத்தில் 21வது நூற்றாண்டைச் சேர்ந்தவராக காந்தி வருகிறார்.
நாட்டிலிருந்து ஊழலை அகற்றப் போராடுகிறார். அகிம்சை, எளிமை, சத்தியாக்கிரகம் ஆகியவற்றை வலியுறுத்துகிறார்.
நாட்டிலிருந்தும், ஏன் இந்த உலகத்திலிருந்தும் வறுமையை விரட்டும் வழியைக் காட்டுகிறார்.
காந்திய சிந்தனைகள் இந்தக் காலகட்டத்திற்கும் ஏற்றதாகவே உள்ளன. அவற்றை தற்போதைய சமூகத்திற்கு எடுத்துக் காட்டும் படமாகவே இது இருக்கும் என்றார் அவர்.
காந்தி வேடத்தில் கனகராஜ் என்பவர் நடிக்கவுள்ளார். இவர் காமராஜ் படத்தில் காந்தி வேடத்தில் நடித்தவர். மேலும் சில முக்கியப் பாத்திரங்களில் நடிக்க நஸ்ருதீன் ஷா, நானா படேகர் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்களை அணுகியுள்ளாராம் பாலகிருஷ்ணன்.
படத்துக்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவை அணுகியுள்ளாராம். அவரும் சம்மதித்துள்ளாராம். விரைவில் படம் தொடர்பான முழு விவரங்களையும் வெளியிடவுள்ளார் பாலகிருஷ்ணன்.