ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்?
அடுத்தபடம் சத்யா மூவீசுக்குதான் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், உலக சூப்பர் ஸ்டாரின் (இதுதான் இப்போது ரஜினிக்கு மீடியா சூட்டியுள்ள பட்டம்!) இந்தப் படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏற்கெனவே ஹரி இயக்குவார் என்றும், சத்யா மூவீசார் அவருடன் பேசியிருப்பதாகவும கூறப்பட்டது.
இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கக் கூடும் என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
கமல் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கும் கே எஸ் ரவிக்குமார், இதுவரை வேறு புதிய படத்துக்கு அட்வான்ஸ் வாங்கவில்லை. ரஜினி படத்துக்காகத்தான் அவர் காத்திருக்கிறார் என்கிறார்கள். அதே நேரம் இந்திப் பட உலகில் முத்திரை பதித்த முருகதாஸும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுக்றது.
ரஜினியும் ரவிக்குமாரும் இணைந்து முத்து, படையப்பா என இரு மெகா ஹிட் படங்களைக் கொடுத்துள்ளனர். இருவரும் இணைவதாக இருந்த மூன்றாவது படம் ஜக்குபாய் நிறுத்தப்பட்டுவிட, பின்னர் அதே கதையை சரத்குமாரை வைத்து இயக்கினார் ரவிக்குமார்.
ஏற்கெனவே ரஜினியின் அனிமேஷன் படமான சுல்தான் - தி வாரியரை கேஎஸ் ரவிக்குமார்தான் இயக்கப்போவதாக ஜெமினி நிறுவனம் அறிவித்தது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











