Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மீண்டும் சுயம்வரம் நடத்த ஆசை!-ராக்கி சாவந்த்
பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரை சுயம்வரம் நடத்தி தேர்ந்தெடுக்கப்போவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிவித்தார்.
உடனே அவரை மணக்க ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். அவர்களில் மூவரைத் தேர்வு செய்த ராக்கி, இவர்கள் மூவரையுமே பிடித்திருக்கிறது என குண்டு போட, அதிர்ந்தனர் கலாச்சார காவலர்கள். ஒருவழியாக அரைகுறை மனசோடு, எலேஷ் என்பவரை தேர்வு செய்தார். நிச்சயதார்த்தம் நடந்தது. எலேஷைப் பார்க்க கனடாவுக்குக் கூட சென்றார் ராக்கி.
போய் வந்தபிறகு எலேஷை உதறித் தள்ளிவிட்டார் ராக்கி.
என்ன காரணம்?
எலேஷ் முதலில் தன்னை ஒரு பணக்காரர் என்று கூறினார். ஆனால் உண்மையில் அவர் ஒரு பெரும் கடன்காரர். இரவு விடுதிகளுக்குப்போய் பணத்தைத் தொலைக்கும் ஆசாமி.
திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகுதான் இவ்வளவும் எனக்குத் தெரிந்தது. வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதை வேறு பெருமையாக என்னிடம் கூறினார் எலேஷ். இன்னொரு பக்கம் அவரது குடும்பத்தினர் என்னை வேண்டா வெறுப்பாகவே பார்த்தனர்.
அவர்கள் யார் என்னை வெறுக்க... எனவே நானே வெறுத்து ஒதுக்கி விட்டேன் அவர்கள் அனைவரையும்.
என் கண்ணசைவுக்கு எத்தனையோ இளைஞர்கள் காத்திருக்க இந்த ஓட்டாண்டிக்காக நான் இத்தனை அவமானப்பட வேண்டுமா என்ற நினைப்பே எனக்கு தாங்க முடியாத கோபத்தை ஏற்படுத்தியது.
இப்போது மீண்டும் ஒரு சுயம்வரம் நடத்த ஆசையாக உள்ளது.
முன்பு நான் சுயம்வரம் நடத்திய போது என்னை யாரும் உண்மையாக திருமணம் செய்ய விரும்பவில்லை. எல்லோரும் எனது பணம், பரிசுக்கு தான் ஆசைப்படுகிறார்கள். அப்படியில்லாமல் என்னை நேசிக்கும் இளைஞர் எனக்கு வேண்டும்.
இந்த முறை எனது பெற்றோர் உறவினர் துணையுடன் புதிய மாப்பிள்ளையைத் தேர்வு செய்வேன் என்றார்.
ஆக, பப்ளிசிட்டிக்கு ராக்கி ரெடி... காசு பார்க்க மீண்டும் தயாராகின்றன சேனல்கள்!