Don't Miss!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Lifestyle 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஈசன்-சசிகுமாரின் அடுத்த அவதாரம்!
ஆனால் நம் மண்ணின் கலைஞன் பாலாவுக்கும் சரி, அவரது இளவல் சசிகுமாருக்கும் சரி, அவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல... 'கதைக்கு கனத்தைத் தரும் தலைப்பா... நான் கடவுள் என்றுதான் வைப்பேன்' என்ற பிடிவாதம்... வித்தை தெரிந்தவனிடம் மட்டுமே நிரந்தரமாய்க் குடி கொண்டிருக்கும் பிடிவாதம் அது.
இதோ, சசிகுமார் தனது அடுத்த படத்துக்கு ஈசன் என்றே தலைப்பு வைத்திருக்கிறார்.
என்ன கதை?
"கதை என்று ஒரு வடிவத்துக்குள் இதை அடக்கிவிட முடியாது. சொல்லித் தெரிந்து கொள்ளுவதை விட, பார்த்து அனுபவிக்க வேண்டிய படம் இது," என்கிறார் சசிகுமார் எடுத்த எடுப்பிலேயே.
மதுரை வாசம் வீசிய அவரது கதைக் களத்தில் முதல்முறையாக சென்னைத் தமிழ் பேசப் போகிறது.
"ஆமா...சென்னை நகரை மையப்படுத்தின கதைதான். ஈசன் அழிக்கிறவன் மட்டுமில்லையே... காக்கிறவனும் கூட. அதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன்னு சொல்லணும். சமுத்திரக் கனி அட்டகாசம் பண்ணியிருக்கார். கூடவே தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனும்" என்கிறார்.
நாடோடிகளில் மனசைக் கவர்ந்த அபிநயாதான் இந்தப் படத்தின் நாயகி.
படத்தை முழுசாக எடுத்த முடித்த பிறகே தலைப்பை அறிவித்திருக்கிறார் சசி என்பது குறிப்பிடத்தக்கது.
சரி... இந்தப் படத்தின் தயாரிப்புப் பொறுப்பிலிருந்து நடிகர் விக்ரம் ஏன் விலகினார்?
"ஒரு தயாரிப்பாளரா அவருக்கு இதுதான் முதல்படம். படத்தின் பட்ஜெட் அவரை கொஞ்சம் யோசிக்க வச்சிருக்கும்னு நெனக்கிறேன். அதை எங்கிட்ட வெளிப்படையா சொன்னார். நான் கொஞ்சமும் யோசிக்கல... நானே தயாரிச்சிக்கிறேன்னு சொல்லிட்டேன். இப்பவும் அவரும் நானும் நல்ல நண்பர்களே... இதுக்காக போய் சண்டை போட்டுக்குவாங்களா?" என்கிறார் மகா கூலாக!
சரி... படம் வெளிவந்த பிறகு அதன் வெற்றியைப் பார்த்து, அடடா நல்ல வாய்ப்பை விட்டுட்டோமே என்று வருத்தப்பட வேண்டிய நிலை விக்ரமுக்கு வரவேண்டும் என்று இருந்தால், அதை மாற்றவா முடியும்!
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!