ஈசன்-சசிகுமாரின் அடுத்த அவதாரம்!

ஆனால் நம் மண்ணின் கலைஞன் பாலாவுக்கும் சரி, அவரது இளவல் சசிகுமாருக்கும் சரி, அவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல... 'கதைக்கு கனத்தைத் தரும் தலைப்பா... நான் கடவுள் என்றுதான் வைப்பேன்' என்ற பிடிவாதம்... வித்தை தெரிந்தவனிடம் மட்டுமே நிரந்தரமாய்க் குடி கொண்டிருக்கும் பிடிவாதம் அது.
இதோ, சசிகுமார் தனது அடுத்த படத்துக்கு ஈசன் என்றே தலைப்பு வைத்திருக்கிறார்.
என்ன கதை?
"கதை என்று ஒரு வடிவத்துக்குள் இதை அடக்கிவிட முடியாது. சொல்லித் தெரிந்து கொள்ளுவதை விட, பார்த்து அனுபவிக்க வேண்டிய படம் இது," என்கிறார் சசிகுமார் எடுத்த எடுப்பிலேயே.
மதுரை வாசம் வீசிய அவரது கதைக் களத்தில் முதல்முறையாக சென்னைத் தமிழ் பேசப் போகிறது.
"ஆமா...சென்னை நகரை மையப்படுத்தின கதைதான். ஈசன் அழிக்கிறவன் மட்டுமில்லையே... காக்கிறவனும் கூட. அதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன்னு சொல்லணும். சமுத்திரக் கனி அட்டகாசம் பண்ணியிருக்கார். கூடவே தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனும்" என்கிறார்.
நாடோடிகளில் மனசைக் கவர்ந்த அபிநயாதான் இந்தப் படத்தின் நாயகி.
படத்தை முழுசாக எடுத்த முடித்த பிறகே தலைப்பை அறிவித்திருக்கிறார் சசி என்பது குறிப்பிடத்தக்கது.
சரி... இந்தப் படத்தின் தயாரிப்புப் பொறுப்பிலிருந்து நடிகர் விக்ரம் ஏன் விலகினார்?
"ஒரு தயாரிப்பாளரா அவருக்கு இதுதான் முதல்படம். படத்தின் பட்ஜெட் அவரை கொஞ்சம் யோசிக்க வச்சிருக்கும்னு நெனக்கிறேன். அதை எங்கிட்ட வெளிப்படையா சொன்னார். நான் கொஞ்சமும் யோசிக்கல... நானே தயாரிச்சிக்கிறேன்னு சொல்லிட்டேன். இப்பவும் அவரும் நானும் நல்ல நண்பர்களே... இதுக்காக போய் சண்டை போட்டுக்குவாங்களா?" என்கிறார் மகா கூலாக!
சரி... படம் வெளிவந்த பிறகு அதன் வெற்றியைப் பார்த்து, அடடா நல்ல வாய்ப்பை விட்டுட்டோமே என்று வருத்தப்பட வேண்டிய நிலை விக்ரமுக்கு வரவேண்டும் என்று இருந்தால், அதை மாற்றவா முடியும்!


Click it and Unblock the Notifications











