Don't Miss!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சசியை வளைத்துப் போட்ட மணி!
இப்போது அவரது காம்பவுண்டுக்குள் அடிக்கடி தென்படும் இளைஞர் சசிகுமார். சுப்பிரமணியபுரம் என்ற ஒரே படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அதே இயக்குநர்.
சில தினங்களுக்கு முன் மணிரத்னமே தேடிப்போய் இந்தப் படத்தைப் பார்த்தார். பார்த்த கையோடு சசிக்கு ஒரு போன்போட்டு நேரில் வரச்சொன்னவர், அவரது திறமையைப் பாராட்டித் தள்ளினாராம். கூடவே ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார்.
தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துக்காக ஒரு படம் செய்து தரவேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை.
சிறுவயதிலிருந்து தான் பார்த்துப் பிரமித்த ஒரு பெரிய இயக்குநரே கேட்கும்போது மறுக்க முடியுமா... உடனே ஒப்புக் கொண்டாராம் சசி.
மணிரத்னத்தைப் பார்க்கும்வரை தானே தயாரித்து இயக்கி நடிக்கும் ஐடியாவில்தான் இருந்தாராம். மணிரத்னத்தின் வேண்டுகோளால் தயாரிப்பை மட்டும் கைவிட்டுள்ளார் சசிகுமார். இந்தப் புதுப்படத்தை இயக்குவதோடு ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் போகிறாராம்.
சசியைத் தவிர மற்றவர்கள் புதுமுகங்களாம். விரைவில் பூஜை குறித்த அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.