அஜீத்தை அடுத்து இயக்குபவர் ஷங்கரா, ராஜாவா?
ஏ எம் ரத்னம் தயாரிப்பில் அஜீத் அடுத்து நடிக்கும் மெகா பட்ஜெட் படத்தை அஇயக்கப் போவது யார் என்ற விறு விறு ரேஸ் தொடங்கிவிட்டது.
இதில் இப்போதைக்கு அஜீத்தின் வழக்கமா இயக்குநர்கள் யாருமில்லை. ஆனால் பெரு்ம் எதிர்ப்பார்ப்புக்குரிய இருவர் உள்ளனர்.
அதில் ஒருவர் ஜெயம் ராஜா. இவருடன் ஏற்கெனவே அஜீத் சில கதைகளை விவாதித்துள்ளார். கடைசியாக மகேஷ்பாபு நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் தூக்குடு படத்தை ரீமேக் பண்ண திட்டம் உள்ளதாகத் தெரிகிறது.
சமீபத்தில் இந்தப் படத்தை அஜீத்தும் ராஜாவும் பார்த்து விவாதித்ததாகச் சொல்கிறார்கள்.
ஆனால் இதைவிட முக்கிய செய்தி, நண்பன் படத்தை முடித்த கையோடு, இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கக் கூடும் என்பதுதான்.
காரணம் ஏற்கெனவே ஏஎம் ரத்னத்துக்கு ஒரு படம் செய்து தருவதாகக் கூறியுள்ளாராம் ஷங்கர். இந்தப் படம் மூலம் அந்த வாக்குறுதி நிறுவேறவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏஎம் ரத்னத்துக்காக ஏற்கெனவே இந்தியன், பாய்ஸ் படங்களைத் தந்தவர் ஷங்கர் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











