Don't Miss!
- News வேணாம்.. தப்பாக போயிரும்..! வாக்குச் சாவடியில் முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்.. அதிசயித்த மக்கள்..!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அஜீத்தை அடுத்து இயக்குபவர் ஷங்கரா, ராஜாவா?
ஏ எம் ரத்னம் தயாரிப்பில் அஜீத் அடுத்து நடிக்கும் மெகா பட்ஜெட் படத்தை அஇயக்கப் போவது யார் என்ற விறு விறு ரேஸ் தொடங்கிவிட்டது.
இதில் இப்போதைக்கு அஜீத்தின் வழக்கமா இயக்குநர்கள் யாருமில்லை. ஆனால் பெரு்ம் எதிர்ப்பார்ப்புக்குரிய இருவர் உள்ளனர்.
அதில் ஒருவர் ஜெயம் ராஜா. இவருடன் ஏற்கெனவே அஜீத் சில கதைகளை விவாதித்துள்ளார். கடைசியாக மகேஷ்பாபு நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் தூக்குடு படத்தை ரீமேக் பண்ண திட்டம் உள்ளதாகத் தெரிகிறது.
சமீபத்தில் இந்தப் படத்தை அஜீத்தும் ராஜாவும் பார்த்து விவாதித்ததாகச் சொல்கிறார்கள்.
ஆனால் இதைவிட முக்கிய செய்தி, நண்பன் படத்தை முடித்த கையோடு, இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கக் கூடும் என்பதுதான்.
காரணம் ஏற்கெனவே ஏஎம் ரத்னத்துக்கு ஒரு படம் செய்து தருவதாகக் கூறியுள்ளாராம் ஷங்கர். இந்தப் படம் மூலம் அந்த வாக்குறுதி நிறுவேறவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏஎம் ரத்னத்துக்காக ஏற்கெனவே இந்தியன், பாய்ஸ் படங்களைத் தந்தவர் ஷங்கர் என்பது நினைவிருக்கலாம்.