Don't Miss!
- News முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைவு! சொல்வது அரசு டேட்டா! ஆனால் மோடி ஏன் அப்படி பேசினார்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திரும்ப திரும்ப தொலைக்கும் அமிதாப்!
வெளியூருக்குப் போகும்போது தாங்கள் கொண்டு செல்லும் சாமான்களை பத்திரமாக வைத்துக் கொள்ளாமல் தொலைத்து விடும் பழக்கம் பலருக்கு உண்டு. அது அமிதாப்புக்கு கிட்டத்தட்ட ஒரு நோய் போல ஆகி விட்டது.
தனது வெளிநாட்டு பயணங்களின்போது லக்கேஜ்களை தொலைப்பதில் புதிய சாதனை படைத்துள்ளார் அமிதாப்.
மறக்க முடியாதசுற்றுப்பயணம் என்ற ெபயரில் பாலிவுட் குழுவினருடன் (மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா உள்பட) வட அமெரிக்க பயணத்தில் உள்ளார் அமிதாப்.
அதன் ஒரு கட்டமாக டொரோண்டோவிலிருந்து டிரினிடாட்டுக்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது பொருட்கள் அடங்கிய பெட்டி ஒன்று காணாமல் போய்விட்டது. இதுகுறித்து அமிதாப்பச்சன் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
- எனது பொருட்களில் பாதியை மீண்டும் காணவில்லை. இந்தமுறை பிரிட்டிஷ் ஏர்வேசில் காணாமல் போகவில்லை. ஆனால் ஏர் கனடாவில் காணாமல் போயிருக்கிறது - என்று அவர் கூறியுள்ளார். ஏர் கனடாவில் தொலைப்பதற்கு முன்பு பிரிட்டிஷ் ஏர்வேஸிலும் லக்கேஜை தொலைத்திருந்தார் அமிதாப் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானத்தில் பயணம் செய்த போது, தாம் அணிந்திருந்த ஆடையுடன் மட்டுமே தாம் தங்கியிருந்த இடத்துக்கு செல்ல நேர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். விமான நிறுவனத்துக்கு என்னையோ அல்லது எனது பொருட்களையோ மிகவும் பிடித்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தாம் கொண்டு சென்ற பொருட்களில் சில சட்டைகள் மற்றும் பேண்டுகளை காணவில்லை என்றும், இதனால் அணிந்திருந்த ஜீன்ஸ் மற்றும் சட்டையுடனே படுக்க வேண்டியிருந்ததாகவும், தனது வலைப்பதிவில் அமிதாப்பச்சன் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி லக்கேஜை தொலைப்பது அமிதாப்புக்கு இது 19வது முறையாகும். ஞாபக மறதியால்தான் இந்த தொல்லை என்று கூறும் அமிதாப், எல்லோருக்கும் என் மீது பாசம் இருக்கும். அதற்காக எனது லக்கேஜையும் பத்திரமாக, பாசத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என நான் எதிர்பார்க்க முடியாதே என்று சிரித்தபடி கூறினார்.