கோவாவுக்காக தள்ளிப் போன அசல்!

அஜீத்- பாவனா- சமீரா ரெட்டி நடிக்க, சரண் இயக்கியுள்ள அசல் முதலில் பிப்ரவரி 5ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது.
ஆனால் உலகமெங்கும் 600க்கும் மேற்பட்ட பிரிண்டுகளுடன் இந்தப் படம் வெளியாவதால் மேலும் ஒரு வாரம் தள்ளிப் போடப்பட்டுள்ளது. கூடுதல் பிரிண்டுகள் மற்றும் ரிலீஸ் ஏற்பாடுகளை சரியாகத் திட்டமிடவே இந்த தள்ளிப் போடல் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள் தரப்பில்.
இதைவிட இன்னொரு முக்கிய காரணம் கோவா பட வெளியீடுதானாம். "அண்ணன் ரஜினியோட மகள் சௌந்தர்யா ரஜினி தயாரித்துள்ள முதல் படம் கோவா. அந்தப் படம் வெளியாகி சிறப்பா ஓடணும். அதுக்காக இன்னும் ஒரு வாரம் எங்க படத்தை தள்ளிப் போடவும் நாங்க தயார்" என்று கூறியுள்ளனர் ராம்குமாரும் பிரபுவும்.
அஜீத்துக்கும் அதே எண்ணம்தானாம். 'கோவா ரிலீசாகி இரண்டு வாரம் கழிச்சி நம்ம படத்தை விடலாம்', என்று கூறிவிட்டாராம்.
அட...!
Comments


Click it and Unblock the Notifications