Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜக்குபாய் ஆடியோ ரெடி!
ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியாவும், ஜீ டிவியும் இணைந்து தயாரித்துள்ளன இந்தப் படத்தில் சரத் குமாரின் மகளாக ஸ்ரேயா நடித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் இந்தப் பட ஆடியோ வெளியீட்டுக்கு தேதி வாங்க கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார் சரத்குமார் என்பது நினைவிருக்கலாம்.
நீண்டகாலம் திமுகவில் இருந்தவர் சரத் குமார். திமுக ராஜ்ய சபா எம்பியாகவும் இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்து, அதிலிருந்தும் விலகி தனிக் கட்சி கண்டவர்.
அரசியலில் பெரிய ப்ரேக் எதுவும் கிடைக்காத நிலையில், சினிமாவில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள இந்தப் படத்தை பெரிதும் நம்பியுள்ளார். முதல்வரும் உடனடியாக இந்த விழாவுக்கு ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆடியோ வெளியீடு அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில்தான் நடக்கிறது.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் முன்பு நடிப்பதாக இருந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. விளம்பரமெல்லாம் வெளியாகி படப்பிடிப்பு துவங்கவிருந்த சூழலில் படம் நிறுத்தப்பட்டுவிட்டது.
ரஜினியே நடிக்கவிருந்த கதை என்பதால், தனதுக்கு பெரிய வெற்றியைத் தரும் என்று தீவிரமாக நம்புகிறார் சரத்.
நம்பிக்கை பலிக்கட்டும்!