Don't Miss!
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. நெல்லை கலெக்டர் அதிரடி.. உடனே சூழ்ந்த போலீஸ்! அடுத்து பரபர
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கருணாநிதி வசனத்தில் பா.விஜய்யின் 'இளைஞன்'!
கவிஞர் பா விஜய் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ஞாபகங்கள் படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் இது.
ரஜினியின் பாட்ஷா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இளைஞனை இயக்குகிறார். இது அவரது இயக்கத்தில் வரும் 50 வது படம்.
பா விஜய்க்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் மற்றும் மீனாட்சி ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் குஷ்பு நடிக்கிறார். வடிவேலு மற்றும் நாசர் போன்றவர்களும் இந்தப் படத்தில் உண்டு.
வித்யாசாகர் இசையமைக்க, பிஎல் சஞ்சய் ஒளிப்பதிவு செய்கிறார். மக்கள் தொடர்பு நிகில்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை வரும் 28ம் தேதி முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார்.
இரு ஆண்டுகளுக்கு முன்பு பா விஜய் நடிக்க, தாய்க்காவியம் என்ற படத்துக்கு பூஜை போடப்பட்டது நினைவிருக்கலாம். மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் நாவலையொட்டி தமிழில் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை நடை நாவல் அது.
இந்தப் படத்தை முதல்வர் கருணாநிதியே துவக்கி வைத்தும்கூட, சில காரணங்களால் அந்தப் படம் நின்று போனது.
இப்போது அந்தக் கதையையே, இளைஞன் என்ற பெயரில் எடுக்கிறார்கள்.