Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கருணாநிதி வசனத்தில் பா.விஜய்யின் 'இளைஞன்'!
கவிஞர் பா விஜய் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ஞாபகங்கள் படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் இது.
ரஜினியின் பாட்ஷா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இளைஞனை இயக்குகிறார். இது அவரது இயக்கத்தில் வரும் 50 வது படம்.
பா விஜய்க்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் மற்றும் மீனாட்சி ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் குஷ்பு நடிக்கிறார். வடிவேலு மற்றும் நாசர் போன்றவர்களும் இந்தப் படத்தில் உண்டு.
வித்யாசாகர் இசையமைக்க, பிஎல் சஞ்சய் ஒளிப்பதிவு செய்கிறார். மக்கள் தொடர்பு நிகில்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை வரும் 28ம் தேதி முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார்.
இரு ஆண்டுகளுக்கு முன்பு பா விஜய் நடிக்க, தாய்க்காவியம் என்ற படத்துக்கு பூஜை போடப்பட்டது நினைவிருக்கலாம். மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் நாவலையொட்டி தமிழில் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை நடை நாவல் அது.
இந்தப் படத்தை முதல்வர் கருணாநிதியே துவக்கி வைத்தும்கூட, சில காரணங்களால் அந்தப் படம் நின்று போனது.
இப்போது அந்தக் கதையையே, இளைஞன் என்ற பெயரில் எடுக்கிறார்கள்.