Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
புதுப் பொலிவுடன் நீ பாதி நான் பாதி
வாரம் தோறும் ஞாயிறு நண்பகல் 12 மணிக்கு மெகா டிவியில் ஒளிரப்பாகும். இந்த நிகழ்ச்சியில் தம்பதியர்கள் இடையே உள்ள அன்பு, பாசம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை ,விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, மனைவியின் கைபக்குவத்தை கண்டு பிடிக்கும் கணவர் என புதிய போட்டி சுற்றுக்களுடன் புதுப்பொலிவுடன் களமிறங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மூன்று தம்பதியர் விறுவிறுப்பாக நான்கு சுற்றுக்களை கடக்க வேண்டும்.
முதல் சுற்றில் ஒரேவகை உணவை சமைத்து, அதில் எது தனது மனைவியின் சமையல் என்பதனை கணவர் கண்டுபிடிக்க வேண்டும். அடுத்த சுற்றில் கணவரோ அல்லது மனைவியோ சைகைகள் மூலம் நடித்துக்காட்டி கொடுக்கப்படும் திரைப்பட பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
அடுத்த சுற்றில் தம்பதியர்கள் இடையே உள்ள ஒற்றுமையை உணரும் வகையில் 5 வினாக்கள் கேட்கப்படும். இறுதிச் சுற்றில் கணவரைப் போல் மனைவியும், மனைவியைப் கணவரும் நடிக்க வேண்டும்.
அதேபோல தங்கள் குடும்ப நண்பர்கள் எப்படி புரிந்து கொண்டுள்ளனர் என்பதனை தம்பதியினர் உணரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் குதூகளிக்கும் கலகலப்பான நீ பாதி நான் பாதி நிகழ்ச்சி மெகா டிவியில் ஞாயிறு தோறும் நண்பகல் 12.00 மணிக்கும், இதன் மறுஒளிபரப்பு வெள்ளி இரவு 8.00 மணிக்கும், ஒளிபரப்பாகிறது.
இதனை தனது கலகலப்பான நகைச்சுவை கலந்துரையாடலுடன் தொகுத்து வழங்குகிறார் நடிகர் பாண்டியராஜன்.