Don't Miss!
- Sports அவர் ஒருவரை தவிர மற்ற ஸ்பின்னர்களுக்கு பயம் .. 120 கிமீ வேகம் அவசியமா.. வருணை பொளந்த ஹர்பஜன் சிங்!
- News அவ்வளவு தான்.. அதிபர் பதவியை இழக்கும் முய்சு? வெடித்த ஊழல் புகார்.. மாலத்தீவில் பெருங்குழப்பம்
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
70வது பிறந்த நாள் கொண்டாடிய 'பஞ்சு'!
நூற்றுக்கும் அதிகமான படங்களின் தயாரிப்பாளர், கதை வசனகர்த்தா, காலத்தை வென்ற பல நூறு பாடல்களை இளையராஜா இசையில் தந்தவர், இயக்குநர் என அஷ்டாவதானி.
ரஜினியை சூப்பர் ஸ்டாராக்கிய பல படங்களின் தயாரிப்பாளர் இவரே.
இந்த ஆண்டு அவருக்கு 'பீமா ரத சாந்தி' (70 வது பிறந்த நாள்). இந்த பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார் பஞ்சு அருணாச்சலம். விழாவில் நடிகர் கமல்ஹாஸன், இளையராஜா, சோ என பலரும் பங்கேற்று அவரை வாழ்த்தினர்.
இதுகுறித்து பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்பு கூறுகையில், "அப்பாவின் பிறந்த நாளை சொந்த ஊரான காரைக்குடியில் கொண்டாட திட்டமிட்டிருந்தோம். ஆனால் ரஜினி சாரும் அவரது நண்பர் கமல்ஹாஸனும் சென்னையில் தங்கள் முன்னிலையில் கொண்டாடப்பட வேண்டும் என விரும்பினர். ஆனால் எதிர்பாராத விதமாக ரஜினி சார் சிங்கப்பூரில் இருக்க வேண்டிய நிலை. ஆனாலும் போனில் வாழ்த்தினர் ரஜினியும் லதாவும். கமல்ஹாஸன் நேரில் வந்திருந்து வாழ்த்தினார்," என்றார்.