Don't Miss!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Automobiles உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'தலைவர்'-ரஜினி குறித்த ஆவணப் படம்!
ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து சினிமாவில் நுழைந்து சூப்பர் ஸ்டார் ஆகி பின்னர் அரசியலில் அவர் ஏற்படுத்திய தாக்கம், அவரைச் சுற்றிய அரசியல் நிகழ்வுகள் என பல விஷயங்களின் தொகுப்பாக இந்த ஆவணப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ரஜினி நடித்த படங்களின் முக்கிய காட்சிகள், பாடல், விழாக்களில் ரஜினி பேசிய உரைகள், வெற்றிப்பட பட்டியல், ஏழைகளுக்கு செய்யும் நற்பணிகள் போன்றவற்றையும் இதில் இணைத்துள்ளனர்.
இந்த ஆவணப்படத்தைத் தயாரித்தவர் சென்னை முகப்பேரைச் சேர்ந்த கவின் கார்த்தி. இவர் ஒரு எஞ்ஜினியரிங் பட்டதாரி. ரஜினியிடம் முன் அனுமதி பெற்று அவர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். முழு வேலைகளும் முடிந்ததும், ரஜினியிடம் காட்டி, அவர் சொன்ன திருத்தங்களைச் செய்து முடித்த பிறகு, நேற்று ராகவேந்திரா மண்டபத்தில் எளிய நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளனர்.
இந்த டிவிடியைத் தயாரித்த கவின் கார்த்திக், ரஜினி ரசிகர் தலைமை மன்ற நிர்வாகி ராமதாஸ், நிர்வாகிகள் அண்ணாநகர் மு. ரஜினிடில்லி, ஷெனாய் நகர் ஸ்ரீகாந்த், டி. தாமஸ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அப்போது குறும்படம் தயாரித்த ரசிகர்களின் முயற்சியை ரஜினி பாராட்டினார். இளைஞர்களின் இந்த முயற்சி வெற்றிபெற தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் ரஜினி.
அடுத்த மாதம் முதல் இந்த டிவிடிகள் விற்பனைக்கு வருகின்றன.
ஏற்கெனவே ரஜினியின் வாழ்க்கை வரலாறு குறித்து டாக்டர் காயத்ரி என்பவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகங்கள் விற்பனையில் சக்கைப் போடு போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.