twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'எந்திரன் சுஜாதாவின் கதை அடிப்படையில் எழுதப்பட்டது!' - ஷங்கர்

    By Chakra
    |

    Shankar
    ரஜினி நடித்த எந்திரன் படத்தின் கதை, அமரர் சுஜாதாவின் என் இனிய இயந்திரா மையமாக வைத்து எழுதப்பட்டது, என்று இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

    ரஜினி - ஐஸ்வர்யா நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் தற்பொழுது வெளிவந்துள்ள எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று அமுதா தமிழரசன் மற்றும் ஆர்னிகா நாசர் ஆகிய இருவரும் தனிதனியாக போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து சிபிசிஐடி போலீஸார் ஷங்கர், தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    இதுதொடர்பாக ஷங்கர் தரப்பில் அளித்துள்ள விளக்கத்தில், "எந்திரன் படத்தின் கதை மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்களின் என் இனிய எந்திரா புத்தகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.

    ஆனால் படத்தின் டைட்டிலில் கதை என்று தன் பெயரையே போட்டுக் கொண்டுள்ளார் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. மூலக்கதை என்று கூட அவர் சுஜாதாவின் பெயரைக் குறிப்பிடவில்லை.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X