Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க கீபோர்டில் A and D இடையே உள்ள எழுத்தை மோடி பார்க்கனும்: மா.கம்யூ போராட்டம்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் படம் எடுக்கணும்' - கருணாஸ் போட்ட 'குண்டு'
சின்னத்திரை நடிகர் ஆனந்த கண்ணன் கதாநாயகனாக நடிக்கும் படம், 'இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.' இந்த படத்தின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நடந்தது.
பாடல் குறுந்தகடை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டார்.
விழாவில், நடிகர் கருணாஸ் கலந்துகொண்டு பேசுகையில், "அதிக பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகள், கட்சி பாகுபாடு இல்லாமல் படம் தயாரிக்க முன்வரவேண்டும். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் படம் தயாரிக்க முன்வரவேண்டும். அப்படி முன்வந்தால், எந்த நேரத்திலும் கதர் வேட்டி கட்ட நான் தயார்.
அரசியல்வாதிகள் எடுக்கிற படத்தில் நடித்தால், அந்த கட்சியின் முத்திரை விழுந்துவிடும் என்று நடிகர்-நடிகைகள் பயப்பட கூடாது. சினிமா, ஒரு தொழில். யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். தகுதி உள்ளவர்கள் அதில் நடிக்கலாம்...,'' என்றார் அதிரடியாய்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேசுகையில், "காங்கிரஸ்காரர்கள் பெரும் பணம் வைத்துக் கொண்டிருக்கவில்லை" என்றார்.
இயக்குநர் டி.பி.கஜேந்திரன், பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் ஆகியோரும் விழாவில் பேசினார்கள்.
அரசியல்வாதிகள் படம் எடுத்தால் எந்தப் 'பிரச்சினை' வந்தாலும் எளிதில் சமாளித்து விடலாம் என்று கருதுகிறாரோ கருணாஸ்...?