Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி' குண்டு கல்யாணம்!
மெல்லத் திறந்தது கதவு படத்தில் கூட இவர் கல்லூரி மாணவராக நடித்திருப்பார். ரஜினியுடன் தில்லு முல்லு படத்திலும் கிச்சு கிச்சு மூட்டியிருப்பார் குண்டு கல்யாணம்.
சின்னதும் பெரிதுமாக கிட்டத்தட்ட 500 படங்களைத் தாண்டிவிட்டார் கல்யாணம். இவர் தந்தை குண்டு கருப்பையா எம்ஜிஆர் படங்களில் நடித்தவர். தீவிர எம்ஜிஆர் விசுவாசியான குண்டு கல்யாணம் அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளரும் கூட.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். படத்துக்கு பெயர் கூட நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்றுதான் வைத்துள்ளார்.
படம் குறித்தும் தான் இயக்குநரான விதம் குறித்தும் நேற்று நம்மிடம் நீண்ட நேரம் பேசினார் கல்யாணம்:
"இயக்குநராவது என்பது இன்று நேற்று எழுந்த எண்ணமில்லை. நீண்ட நாள் ஆசை, கனவு. இந்த கனவுக்கு உயிரூட்டியவர் தயாரிப்பாளர் விஎஸ் ரிஷிராஜ். என்னுடைய எண்ணத்தை அறிந்ததும், கதை கூட கேட்கவில்லை. முதலில் ஆபீஸ் போட்டுக் கொடுத்துவிட்டு, அதன் பிறகுதான் கதை கேட்டார். அத்தனை நம்பிக்கை.
இந்தப் படம் முழுக்க முழுக்க குழந்தைகளும் குடும்பத்தினரும் குதூகலமாகப் பார்க்கும்படியான நகைச்சுவைப் படம்.
காட்டுக்குள் சுற்றுலா போகும் குழந்தைகள் அங்கே சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள். எப்படி வெளியே வந்தார்கள் என்பதுதான் ஒன்லைன்.
காட்டுக்குள் மாட்டிக் கொண்டு நட்சத்திரங்கள் படும் அவஸ்தையை ரசிகர்கள் குலுங்கிக் குலுங்கி சிரித்தபடி பார்ப்பார்கள். அதற்கு நான் கியாரண்டி.
சத்யமங்கலம், மேட்டூர் காடுகளில் பாதுகாப்பான ஏரியாவில் படப்பிடிப்பு நடத்தப்போகிறோம். என் மகள் ஜனனி உள்பட 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
இவர்களைத் தவிர இரண்டு புதுமுகங்கள் நாயகன் நாயகியாகவும் நடிக்கிறார்கள். எல்லாருமே புதுசு என்பதால் கோச்சிங் கொடுத்துதான் ஷூட்டிங் ஆரம்பிக்கப் போறேன.
இந்தப்படம் குழந்தைகளுக்கு நகைச்சுவையுடன் நல்ல படிப்பினையையும் கொடுக்கும். தலைவர் எம்ஜிஆர்ஆசியுடன் பெரிய வெற்றியைப் பெறும் என்கிறார் நம்பிக்கையுடன்.
இந்தப் படத்தில் வனக்காவலர் வேடத்திலும் நடிக்கிறாராம் கல்யாணம்.
முதல்படமே குழந்தைகள் படமாக எடுக்க முயன்றது ஏன் என்றோம்.
ரொம்ப தெளிவாக இப்படிச் சொன்னார்:
"எந்தக் குழந்தையும் தனியா படம் பார்க்க வரப்போவதில்லை. நிச்சயம் குடும்பத்தோடுதான் வருவாங்க. அதனால வெற்றி நிச்சயம்!".