Don't Miss!
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பேசவே முடியாத அபிநயாவின் நடிப்பு அபாரம்-அமீர் புகழாரம்
சசிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஈசன். இப்படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அமீர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், பாலாவிடம் இருந்து நான் வந்தேன். இதோ என்னிடமிருந்து சசிகுமார். இது நான் ஆசைப்பட்ட ஒன்று. சசி இன்றைக்குப் பெரிய இயக்குநராக இருப்பதில் பெரும் மகிழ்ச்சியடையும் முதல் ஆள் நான்தான். அதுவும் அவர் வெற்றிப் பட இயக்குநராக இருப்பதில் இன்னும் மகிழ்ச்சி.
நான் சசியை பார்த்து வியந்து போன விஷயங்களில் ஒன்று, சமுத்திரகனியும், சசிகுமாரும் இணைந்து அபிநயா என்ற பெண்ணை நடிக்க வைத்த விஷயம்தான். காது கேளாமல், பேச முடியாத ஒரு பெண்ணை நடிக்க வைத்து ரசிகர்களின் ரசனைக்கு உள்ளானார்கள்.
இந்த விஷயம் இந்திய சினிமா வரலாற்றில் எந்த இயக்குநரும் செய்யாத ஒன்று. இதை நாம் ஏன் செய்யாமல் விட்டு விட்டோம் என எண்ணுவது உண்டு என்றார் அமீர்.
விழாவில் இயக்குநர் கே.பாலச்சந்தர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.