Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரூ.100 கோடியில் மர்மயோகி - ஜூலை 13-ல் பூஜை!
பிரமிட் சாயமிரா நிறுவனத்துக்காக சுமார் 100 கோடி ரூபாய் செலவில் முதல் பிரதி அடிப்படையில் கமல் தயாரிக்கும் படம் இது. இம்முறை அவரே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கப் போகிறார்.
ஜூலை 13-ம் தேதி இந்தப் படத்தை அதிகாரப் பூர்வமாக அவர் துவங்கப் போவதாக தெரிகிறது. ஆனால் இங்கல்ல... மும்பை கிராண்ட ஓட்டலில் பிரமாண்ட விழாவில் மர்மயோகியைத் துவக்குகிறார்.
இந்தி பெல்ட்டை கலக்கும் வகையில், மர்மயோகியை இந்திப் பட உலக ஜாம்பவான்களைக் கொண்டே பிரமாண்டமாகத் துவக்க விரும்புகிறார் கமல்.
ஆரம்பத்தில் இப்படத்தை வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதாகத்தான் கமல் கூறி வந்தார். இப்போது தயாரிப்பு சாய்மிராவுக்கு மாறியிருக்கிறது.
தனது கனவுப் படமான மருதநாயகத்தைத்தான் சற்றே மாற்றி மர்மயோகியாக சரித்திரப் பின்னணியில் அவர் எடுக்கப் போகிறார் என்கின்றன நம்பத் தகுந்த வட்டாரங்கள். எனவே பட்ஜெட் தொகை ரூ. 100 கோடிக்கு மேலும் போகக்கூடும் என எதிர்பார்க்கிறது சாய்மிரா நிறுவனம். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, நீங்கள் நினைத்த மாதிரி படத்தை எடுங்கள் என்று கமலிடம் கூறிவிட்டார்களாம் சாய்மிரா நிறுவனத்தினர்.