Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிறந்தது திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம்-உண்ணாவிரதம்
பிலிம்சேம்பர் வளாகத்தில் காலை 9 மணிக்குத் துவங்கிய இந்த உண்ணாவிரதம் மாலை 6 மணி வரை நடக்கிறது.
இதில் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, பாலு மகேந்திரா, இயக்குநர்கள் அமீர், நடிகர்கள் சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இயக்குநர் சீமான் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார். அவர் வந்த போது பெரும் ஆரவாரம் எழுந்தது.
இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சரவண சுப்பையா, சேரன், மணிவண்ணன், வெற்றி மாறன், ஹரி, பிரவீன்காந்த், சுசிகணேசன், சசி, சமுத்திரகனி உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். நடிகர்கள் கஞ்சா கருப்பு, பாடலாசிரியர் தாமரை உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
பார்வையாளர்களாக வரும் பொது மக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களும் வருவார்கள் என போராட்டக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
உண்ணாவிரத முடிவுக்குப் பின்னர் அடுத்த கட்டப் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என பாரதி ராஜா அறிவித்துள்ளார்.
மிகக் குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்டாலும், திரையுலகினர் திரளாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அனைவரும் உணர்ச்சிப் பெருக்கோடும், கருப்புச் சட்டைகள் அணிந்தும் காணப்பட்டனர்.
சமீபத்தில்தான் இலங்கையில் போரை நிறுத்தி விட்டு சோனியா காந்தி தமிழகத்திற்கு வர வேண்டும். அதை விட்டு விட்டு எழவு வீட்டில் வந்து ஓட்டு கேட்கக் கூடாது. இலங்கையில் போரை நிறுத்தாவிட்டால் தொடர் போராட்டங்களில் திரையுலகம் ஈடுபடும் என எச்சரித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.